follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுஇலங்கை வந்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இலங்கை வந்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

Published on

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

இவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் தமிழ்த்தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய செய்தியுடன் கொழும்பு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான திகதி குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவிக்கலாம் என இராஜதந்திர மட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஏனெனில் ஜனாதிபதி ரணில் பதவியேற்றதன் பின்னர் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் இதுவரையில் அதற்கான வாய்ப்பு கிடைக்க வில்லை.

எனவே இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து இலங்கை கவனத்தில் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...