நீதி அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.சகார்யன் ஆகியோருக்கு இடையில் நீதியமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இலங்கைக்கும் ரஷ்ய அரசுக்கும் இடையில் நீண்டகால நட்புறவு காணப்படுவதாகவும், ரஷ்ய அரசின் மேலதிக ஆதரவை அமைச்சர் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு தாம் பாடுபடப்போவதாகவும், தேவைப்படும் போதெல்லாம் இலங்கைக்கு தமது நாட்டின் ஆதரவை வழங்குவதாகவும் தூதுவர் அங்கு தெரிவித்துள்ளார்.