follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுரயில்வேக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க தனியான பிரிவு

ரயில்வேக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க தனியான பிரிவு

Published on

ரயில்வே துறைக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் காணிகளை நிர்வகிப்பதற்கு விசேட பிரிவை அமைக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ரயில்வே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு தற்போது நாடு முழுவதும் 14,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் உள்ளதாகவும், அதில் 8,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு புகையிரத நிலையங்களுக்கும் ஏனைய நிர்வாகத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், சொத்து முகாமைத்துவம், சுமார் 5,000 ஏக்கர் காணி இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அவற்றினை குத்தகை அடிப்படையில் வழங்க முடியும் என்றாலும் 1,500 ஏக்கர் மட்டுமே குத்தகை ஒப்பந்தத்தில் வெளி தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரியவந்தது. புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை எவ்வித சட்டபூர்வ உரிமையோ அல்லது குத்தகை ஒப்பந்தமோ இன்றி சட்டவிரோதமாக அனுபவிக்கும் நபர்களை இனங்கண்டு அவர்களிடமிருந்து புகையிரத திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய குத்தகை பணத்தை விரைவாக பெற்றுக்கொள்ளும் முறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ரயில்வேக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் காணிகளை நிர்வகிப்பதற்கு தனியான பிரிவொன்றை விரைவில் அமைக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...

வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா...

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...