follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுபேர வாவியை இலவசமாக சுத்தப்படுத்த ஜப்பானிய நிறுவனம் இணக்கம்

பேர வாவியை இலவசமாக சுத்தப்படுத்த ஜப்பானிய நிறுவனம் இணக்கம்

Published on

கொழும்பில் உள்ள பேர வாவியை சுத்தம் செய்து அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை இலவசமாக முன்னெடுப்பதற்கு ஜப்பானிய நிறுவனம் ஒன்று அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த நிறுவனம் இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

6 மாதங்களுக்குள் இந்த வேலைத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு , இதற்காக 3 மில்லியன் டொலர் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிதி சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து மானியமாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

பெப்ரவரி முதல் வாரத்தில் இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு , அதன் பிறகு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்து சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

இலங்கையையும் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக இன்று (18) முதல்...

இ-பாஸ்போர்ட் முறை அடுத்த சில மாதங்களில்

இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான்...

வெள்ளம் ஏற்படும் அபாயம்

எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி,...