follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுபல்கலைக்கழக மாணவி கொலை - சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

பல்கலைக்கழக மாணவி கொலை – சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Published on

பல்கலைக்கழக மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று(30) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையின் மனநல சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த மாணவியின் திடீர் மரணம் தொடர்பான ஆரம்பகட்ட நீதவான் விசாரணை, கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று(30) நடைபெற்ற போது மாணவியின் தந்தை சாட்சியமளித்தார்.

24 வயதான குறித்த மாணவி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் வைத்து கடந்த 17ஆம் திகதி கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...