follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉலகம்துருக்கி, சிரியா நிலநடுக்கம் - 8,000ஐ கடந்த பலி எண்ணிக்கை

துருக்கி, சிரியா நிலநடுக்கம் – 8,000ஐ கடந்த பலி எண்ணிக்கை

Published on

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 8,000-ஐ கடந்தது.

கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக் கருதப்படுகிறது.

கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியும், அண்டை நாடான சிரியாவும் குலுங்கின. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் சில நிமிஷங்களில் குடியிருப்புகள் உள்பட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின.

இதேவேளை நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள துருக்கியின் 10 மாகாணங்களில் அடுத்த 3 மாதங்களுக்கு அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக அந்த நாட்டின் அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...