follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுசபாநாயகர் - பான் கி மூன் சந்திப்பு

சபாநாயகர் – பான் கி மூன் சந்திப்பு

Published on

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமும், உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (Global Green Growth Institute (GGGI) ) தலைவருமான பான் கி மூன், சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று(07) சந்தித்தார்.

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்ற ரீதியில் பான் கி மூன், பசுமை அபிவிருத்தி, நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தியிருந்ததுடன், கார்பன் வெளியீட்டைக் குறைத்து நிலைபேறான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் புதிய கூட்டாண்மைகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

அரசியலில் கொள்கைகள் வகுக்கப்படும்போது பசுமை வளர்ச்சிக்கான மாதிரியொன்று அடையாளம் காணப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான குரல் பாராளுமன்றத்தின் ஊடாக எழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மத்தியில் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் சுட்டிக்காட்டிய சபாநாயகர், இந்த இலக்கை அடைவதற்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து பான் கி மூன், இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங் மற்றும் GGGI இன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஃபிராங்க் ரிஜ்ஸ்பெர்மேன் உள்ளிட்ட தூதுக் குழுவினர் பாராளுமன்ற சபா மண்டபத்தைப் பார்வையிட்டனர்.

LATEST NEWS

MORE ARTICLES

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...

“அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” – நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை

நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம்...

ஊழல் ஒழிப்பை அரசியல் கோசமாகக் பயன்படுத்தும் யுகம் முடிவுக்கு வரும்

அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் தற்போதைய அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் ஊழல்...