follow the truth

follow the truth

August, 25, 2025
HomeTOP3வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு

Published on

புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (08) காலை ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் இன்று (09) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

விசேட வைத்தியர்கள், அரச பல் வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச பதிவு மற்றும் உதவி வைத்தியர்கள் உட்பட அனைத்து வைத்தியர்களும் நேற்று இந்த தொழிற் சங்க போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

இதனால், பல அரச மருத்துவமனைகளில் நோயாளர் பாதிக்கப்பட்டனர்.

எதிர்வரும் சில தினங்களில் அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிடின் அடுத்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் எதிர்வரும் 17ம் திகதிக்கு பின்னர் கடுமையான தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக துறைமுக சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் தலைவர் திரு.பிரசன்ன களுதரகே தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...