follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுமக்களை கஷ்டப்படுத்தி பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது

மக்களை கஷ்டப்படுத்தி பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது

Published on

நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை யாது? குறித்த பிரச்சினைக்கு என்ன தீர்வு? எந்த தலைவரால், எந்த தொலைநோக்குக்கால், எந்த தரப்பால், எந்த வேலைத்திட்டத்தால் இதற்கான தீர்வை வழங்க முடியும்? என மூன்று கேள்விகளைப் பற்றி இந்நாட்டின் 220 இலட்சம் மக்கள் சிந்திக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை நாட்டிற்கு பணமில்லை என்பதால் வங்குரோத்தாகுவது எனவும், அதில் இருந்துதான் ஒவ்வொரு பிரச்சினையும் எழுவதாகவும், வங்குரோத்தாகி கிடக்கும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கான பணத்தை பெறக்கூடிய அரசாட்சி ஒன்று தான் இதற்கான தீர்வு எனவும், அவ்வாறான ஆட்சியின் ஊடாக பணப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை சுருங்கச் செய்வதே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்று தற்போதைய அரசாங்கம் நினைப்பதாகவும், இதற்காக வட்டி விகிதங்கள் 30-35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது தேவையைக் குறைத்து, உற்பத்தியைக் குறைத்து, வருமானத்தைக் குறைத்து வேலையின்மையை அதிகரிக்கும் எனவும், சிறு பொருளாதாரத்தை சுருக்கி, நிகர பொருளாதாரமும் சுருங்கும் செயற்பாடே இதில் இடம் பெறுவதாகவும், இதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்வு தகர்ந்து போகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலை மாற வேண்டும் என்றும், மக்களை கஷ்டப்படுத்துவதன் மூலம் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,
மக்கள் கஷ்டப்படும் போது யானை-மொட்டு-காக்கை ராஜபக்ச குடும்பம் சுகபோகங்களை அநுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே மக்களின் சொத்துக்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...