மின் கட்டண திருத்தம் தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதாக? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மனு இன்று (13) சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மின் நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.