follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉலகம்ஈக்வடோரியல் கினியாவில் மார்பர்க் எனும் புதிய வைரஸ் - 9 பேர் பலி

ஈக்வடோரியல் கினியாவில் மார்பர்க் எனும் புதிய வைரஸ் – 9 பேர் பலி

Published on

மத்திய ஆப்பிரிக்க நாடான ஈக்வடோரியல் கினியாவில் மார்பர்க் ( Marburg) என்னும் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மார்பர்க் வைரஸ் தொற்றுக்கு 9 பேர் உயிரிழந்திருப்பதை ஈக்வடோரியல் கினியா உறுதிப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அறியப்படாத இரத்தக்கசிவு காய்ச்சல் சிலருக்கு பரவியது கண்டறியப்பட்டதும், 200-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த தொற்று காரணமாக அண்டை நாடான கெமரூனும் எல்லைப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியது.

ஈக்வடோரியல் கினியாவில் காய்ச்சல், சோர்வு, இரத்தம் கலந்த வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளுடன் மார்பர்க் வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் 16 பேர் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...