follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉலகம்சீனா பலூன்கள் உளவு பார்ப்பதாக ஜப்பான் குற்றச்சாட்டு

சீனா பலூன்கள் உளவு பார்ப்பதாக ஜப்பான் குற்றச்சாட்டு

Published on

ஜப்பானின் வான்வெளியில் சமீபத்தில் பறந்த அடையாளம் தெரியாத பொருட்கள் சீனா உளவு பார்க்க பயன்படுத்திய பலூன்களாக இருக்கலாம் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், பலூன் போன்ற வடிவத்துடன் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் ஜப்பானின் வான்வெளி வழியாகச் சென்றது கண்டறியப்பட்டது. ஆனால் அவை என்ன என்பதை ஜப்பான் உறுதிப்படுத்தவில்லை.

எனினும், இந்த பறக்கும் பொருட்களை சீனா உளவு பார்க்க பயன்படுத்தியதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குமாறு சீன அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனவும் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.

வான்வெளியை மீறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஜப்பான் கூறுகிறது. அமெரிக்கா தனது வான்வெளியில் உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் சீன பலூனை சுட்டு வீழ்த்தியதை அடுத்து, சீன பலூன்கள் குறித்து ஜப்பான் வெளியிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...