follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுபிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

Published on

5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைய அவசர தேவைகளைக் கருத்திற் கொண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் யு.பீ.ஏ.கே.பீ.கருணாநாயக்க மேல் மாகாண போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பாகக் காணப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜீ.ஐ.டீ.ஆர விஜேசிங்க , காலி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.ஏ.யு.சரத் குமார , மேல் மாகாண குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மப அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யு.கே.ஜே.ஆர்.டயஸ் , சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவிற்கான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காலி மாவட்டத்திற்கு பொறுப்பாக பணியாற்றிய பிரதி பொலிஸ்மா அதிபர் ஏ.எல்.யு.என்.பீ.லியனகே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...