follow the truth

follow the truth

May, 6, 2025
HomeTOP1கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு 2.5 பில்லியன் டாலர் முதலீடு

கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு 2.5 பில்லியன் டாலர் முதலீடு

Published on

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இரண்டு விதிமுறைகள் இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கான ஒழுங்குமுறை மற்றும் அதற்கான கட்டணங்கள் குறித்த யோசனையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, துறைமுக நகரத்தில் சுமார் 2.5 பில்லியன் டொலர் பெறுமதியான முதலீடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக துறைமுக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

துறைமுக நகரத்தின் அடிப்படை நிர்மாணப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, எதிர்காலத்தில் மேலும் சில பகுதிகளை மக்களுக்காக திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக துறைமுக நகர ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று நடாத்த கோரிய விவாதத்தை வழங்க அரசாங்கம் இணங்கவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க...