follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுசமுர்த்தி உள்ளிட்ட கிராமிய வங்கிகள் ஊடாக கடன் வழங்குவது தொடர்பில் அவதானம்

சமுர்த்தி உள்ளிட்ட கிராமிய வங்கிகள் ஊடாக கடன் வழங்குவது தொடர்பில் அவதானம்

Published on

கிராமிய கடன்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பு தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகியகால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.

உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (23) கூடியபோதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு, இலங்கை கொள்கைகள் கற்கை நிறுவனம் மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி வேலைத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வேலைத்திட்டங்கள் ஊடாக நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, இந்த நிவாரணங்களை குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு முறையாக வழங்குவது தொடர்பில் முறைமையொன்றை தயாரிப்பது பற்றி வருகை தந்தவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

அதேபோன்று, சமுர்த்தி வங்கி உள்ளிட்ட கிராமிய வங்கிகள் ஊடாக கடன்களை வழங்குவது தொடர்பிலும் இந்தபோது கவனம் செலுத்தப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...

யாழில் நாய் இறைச்சி : கடைக்கு சீல்

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற...

அடுத்து சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

இலங்கையையும் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக இன்று (18) முதல்...