follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுமனித கடத்தலை முறியடிக்க ஒரு புதிய திட்டம்

மனித கடத்தலை முறியடிக்க ஒரு புதிய திட்டம்

Published on

மனித கடத்தல்காரர்களிடம் இருந்து இலங்கையர்களை பாதுகாக்கும் வகையிலும், ஆள் கடத்தலை தடுக்கும் வகையிலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பயோமெட்ரிக் தகவல்களை டிஜிட்டல் மயமாக்கி தரவுத்தளத்தில் சேமித்து வைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனிநபர்களின் உடல் அம்சங்கள் மற்றும் குணாதிசயங்கள் தரவு அமைப்பில் சேமிக்கப்பட்டு கண்கள், கைரேகைகள் மற்றும் பிற உடல் பண்புகள் பெறப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆள் கடத்தலைத் தடுக்கும் வகையில், இலங்கை வெளிநாட்டுச் சேவைப் பணியகம், பணியகச் சட்டத்தில் புதிய திருத்தங்களை முன்வைத்து விதிகளை கடுமையாக்குவதுடன், அதற்காக ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களின் தலையீட்டில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...