follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉலகம்எரிபொருள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

எரிபொருள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

Published on

இந்தோனேசியா நாட்டின் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 25 சதவிகிதம் குறித்த கிடங்கில் இருந்து தான் விநியோகிக்கப்படுகின்றது.

இந்த சேமிப்பு கிடங்கில் இருந்த எரிபொருள் தீப்பற்றி எரிந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மேலும், காயமடைந்த பலர் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மழை காரணமாக எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் மின்னல் தாக்கியதில் தீ பிடித்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

உக்ரைன் போருக்கு அரசியல் தீர்வு தேவை

உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

சும்மா இருக்கும் போட்டி – பரிசு வழங்கும் தென்கொரிய அரசு

தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த போட்டியில் அந்த...