சுமார் 11 இலட்சம் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப்படாத பழைய சாரதி அனுமதிப்பத்திரங்களில் இருந்து புதுப்பிக்கப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.
சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்கும் சாரதிகளின் உடல் தகுதி தொடர்பான அறிக்கை எதுவும் திணைக்களத்திடம் இல்லாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிஷாந்த வீரசிங்க மேலும் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் புதிய சாரதி உரிமம் வழங்கப்படுவதற்கு முன்னர் புதுப்பிக்கப்படாத சுமார் 20 இலட்சம் சாரதி உரிமங்கள் இன்னும் சாரதிகளிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.