ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 22000 பேருக்கு ஈரானிய சிரேஷ்ட தலைவர் அலி காமேனியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
மொத்தமாக 82000 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 22000 பேர் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
ஈரானில் கடந்த செப்டம்பரில் குர்திஷ் இளம் பெண் மாஷா அமினி, அந்நாட்டின் பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்ததையடுத்து, போராட்டங்கள் வலுப்பெற்றன.