நாளை (15) முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தனியார் பஸ்கள் ஆதரவு வழங்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மக்கள் சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவர்களாக இருந்தாலும், பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டால், தொழிலாளர்கள் பட்டினி கிடக்க நேரிடும், எனவே எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு வரை பஸ் சேவைகளை தடையின்றி முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.