follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுவெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கான அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கான அறிவிப்பு

Published on

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு உரிமம் வழங்கும் போது, குறித்த முகவர் நிலையங்கள் வைத்திருக்க வேண்டிய வங்கி உத்தரவாதத்தை 3 மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்துவதற்கான உரிமம் வழங்கும் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுப்பப்பட வேண்டிய வங்கி உத்தரவாதத்தை 750,000 ரூபாவிலிருந்து 3 மில்லியனாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது இரண்டாவது வருடத்தில் இருந்து 5 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதன் செயற்பாடுகளை கடுமையாக ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...