follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபாடசாலை மாணவியை போதைக்குட்படுத்தி பாலியல் பலாத்காரம்

பாடசாலை மாணவியை போதைக்குட்படுத்தி பாலியல் பலாத்காரம்

Published on

கொழும்பு பிரதேசத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியுடன் காதல் உறவைப் பேணி, ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாக்கி அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 23 வயது இளைஞன், கொழும்பு மத்தியப் பிரிவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவின் பொலிஸ் குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பதினேழு வயதுடைய மாணவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள செல்வந்த வர்த்தகரின் மகள். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேலையில்லாதவர் என தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என சிறுமியின் தாய் பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளார்.

மகள் சுமார் 6 வருடங்களாக இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் தனது முறைப்பாட்டில் தாயார் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலமுறை எச்சரித்தும் மகள் உறவை நிறுத்தவில்லை என அவர் பொலிசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...