follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுஅடுத்த சில நாட்களுக்குள் இலங்கைக்கு மேலும் ஒரு கடன் வசதி

அடுத்த சில நாட்களுக்குள் இலங்கைக்கு மேலும் ஒரு கடன் வசதி

Published on

எதிர்வரும் சில நாட்களுக்குள் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இலங்கை வந்துள்ள உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் சியோ கந்தா (Chiyo Kanda) மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோரும் இது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

குறித்த கடன் தொகை கிடைத்தவுடன் இலங்கையின் அடுத்த கட்ட பொருளாதார நகர்வுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் நீண்ட கலந்துரையாடல்கள் உலக வங்கியுடன் இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க UNP – SJB இடையே இணக்கப்பாடு

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக்...

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மஹிந்தானந்த நீதிமன்றில் ஆஜர்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். கடந்த அரசாங்கத்தின்...

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார வாரியம் அறிக்கை

முன்மொழியப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் கட்டணத்தை அதிகரிக்கும் என்றாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் இருந்த மின்சார...