follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் விற்பனை வெகுவாக குறைவு

எரிபொருள் விற்பனை வெகுவாக குறைவு

Published on

எரிபொருள் விநியோகம் செய்பவர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மாதாந்திர வருமானம் 30% – 40% வரை விற்பனையில் தொடர்ச்சியான குறைவு காரணமாக குறைந்துள்ளது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் இருப்பு ஓரிரு நாட்களில் தீர்ந்துவிடும் எனவும் தற்போது அதற்கு மூன்று நான்கு நாட்கள் ஆகும் எனவும் ஒன்றியத்தின் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.

இந்நிலைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் அதிக வங்கி வட்டிக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களை கூட நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள QR குறியீடு காரணமாக எரிபொருள் விற்பனை குறைந்துள்ளதாகவும், ஒரு காருக்கு 80 லீட்டர் பெட்ரோல் பெறுவதற்கு 32,000 ரூபா செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலைமையால் எதிர்காலத்தில் QR குறியீடு தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. ஆமர் வீதி மற்றும்...

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட...

மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க...