follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்டிக்டாக் செயலிக்கு தடை விதித்தது அவுஸ்திரேலியா

டிக்டாக் செயலிக்கு தடை விதித்தது அவுஸ்திரேலியா

Published on

அவுஸ்திரேலியாவில் அரச சாதனங்களில் டிக்டொக்கை தடைசெய்வதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புலனாய்வு மற்றும் பாதுகாப்பு துறையினரின் ஆலோசனைக்கு பின்னர் பொதுநலவாய திணைக்களங்கள் மற்றும் முகவர் அமைப்புகளின் சாதனங்களில் டிக்டொக்கை தடைசெய்வதற்கான உத்தரவை பாதுகாப்பு கொள்கை கட்டமைப்பின் கீழ் கட்டாய உத்தரவாக பிறப்பித்துள்ளதாக அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, இங்கிலாந்து அரசாங்க காரியாலய கைத்தொலைபேசிகளில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்தது. பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை செயற்படுத்தியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் டிரம்ப்பிடம் கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த...

மெக்சிகோ வாகன விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா...

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...