follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுநிர்வாக தெரிவில் கைகலப்பு - ஒருவர் பலி

நிர்வாக தெரிவில் கைகலப்பு – ஒருவர் பலி

Published on

சம்மாந்துறையில் நிர்வாக தெரிவில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக நேற்று(7) ஒருவர் உயிரிழந்துள்ளார்.

65 வயதான மலையடி கிராமம் 4 கிராம சேவையாளர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நிர்வாக காலம் முடிந்த நிலையில் கூட்டத்தில் பங்குபற்றிய ஒரு சிலர் பெருநாள் முடிந்தவுடன் நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறும், மற்றைய குழுவினர் ஓரிரு தினங்களுக்குள் தெரிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தியதன் காரணமாகவும் எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை தெரிவு செய்ய முடிவு செய்து கலைந்து வெளியே வரும் போதே இம்மோதல் இடம் பெற்றதாக சம்பவம் குறித்து தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர்களாக நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...