follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடு1500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

1500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published on

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்போது அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களை பதுக்கி வைத்தமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 1500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றமை, அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றமை உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

விசேட சுற்றிவளைப்புகளுக்காக மேலதிக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், விடுமுறை தினங்களிலும் இரவு நேரங்களிலும் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...