follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமூன்று உயர் பதவி நியமனங்களுக்கு அனுமதி

மூன்று உயர் பதவி நியமனங்களுக்கு அனுமதி

Published on

இரு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனத்துக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் புதிய தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.எஸ். சத்யானந்தாவின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் புதிய செயலாளராக எம்.எம். நைமுதீனின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இது தவிரவும், பிலிப்பைன்சுக்கான இலங்கைத் தூதுவராகக் கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவாவை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...