follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்

Published on

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை முன்னேற்றுவதற்காக விசேட நலன்புரி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கைக்கு வந்து தொழில் முயற்சியாளர்களாக பணியாற்ற எதிர்பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் 2 மில்லியன் ரூபா வரை குறைந்த வட்டியில் கடன் வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவையில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்;

“.. வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடும் வீட்டுப் பணியாளர்களின் குடும்பங்களின் நிலை குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்ந்து அவதானித்து வருகின்றது.

பணியகம் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் பாதுகாப்புடன் கையாள்கிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வேலைக்குச் செல்லும் அனைத்து தொழிலாளர்களின் தரவுகளும் பணியகத்தின் கணினி அமைப்பில் உள்ளிடப்பட்டுள்ளன. அதேபோன்று, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ், குடும்பங்களின் நலன் மற்றும் பாதுகாப்பு அனைத்து பிராந்திய செயலக அலுவலகங்களிலும் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக கையாளப்படுகிறது.

அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது குடும்பத்தை கவனித்துக்கொள்வதுடன், நாட்டிலிருந்து திரும்பும் தொழிலாளிக்கு அதிகாரம் அளிக்கவும் அவர்கள் பணியாற்றுகிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் இரண்டு மில்லியன் கடனுதவி வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கைக்கு திரும்பிய தொழிலாளர்களை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் வகையில் இந்த கடன் முறையை மேலும் விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் முழுப் பிரிவும் வெளிநாட்டு ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குகிறது…”

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...