follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1அதிகரித்துள்ள மருந்து தட்டுப்பாடு தற்போது குறைந்துள்ளது

அதிகரித்துள்ள மருந்து தட்டுப்பாடு தற்போது குறைந்துள்ளது

Published on

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தற்போது 100-112க்கு இடையில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் 169 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது நிலைமை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் (25) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்த நாட்டில் மருந்து தட்டுப்பாடு வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் கூறினார். குறிப்பாக கடந்த பத்து வருடங்களை பின்னோக்கிப் பார்க்கும் போது, ​​நாட்டில் மருந்துகளின் தேவை 100% பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், குறிப்பிட்ட அளவு மருந்துப் பற்றாக்குறை எப்போதும் காணப்படுவதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கை 383 ஆகவும், உயிர் காக்கும் மருந்துகளின் எண்ணிக்கை 14 ஆகவும் உள்ளது. நாட்டில் உயிர்காக்கும் மருந்துகளின் அளவு குறைவில்லாமல் தொடர்ச்சியாக இருந்ததை சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர், தற்போது அந்த மருந்துகள் அனைத்தும் சுகாதார அமைச்சிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

நோயாளர்களுக்குத் தேவையான பல மருந்துகள் நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அடுத்த இரண்டு வருடங்களில் நாட்டுக்குத் தேவையான மருந்துகளில் 40-50 வீதத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் சுகாதார அமைச்சர் வைத்தியர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் சுட்டிக்காட்டினார். தேவையான அனைத்து அடிப்படை வேலைத்திட்டங்களும் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப அந்த இலக்கை அடைய முடியும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...