follow the truth

follow the truth

June, 13, 2025
Homeஉள்நாடுகடந்த வாரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவு

கடந்த வாரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவு

Published on

கடந்த வாரம் மாத்திரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சிகாதார பிரிவுகளும் இந்த அதிக அபாய வலயங்களில் உள்ளடங்குவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள சில சுகாதார மற்றும் மருத்துவ பிரிவுகளும் டெங்கு அபாய வலயங்களுக்குள் உள்ளடங்கியுள்ளன.

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர், கம்பஹா மாவட்டத்திலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமான விபத்து – ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் இலங்கை

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது குறித்து, இலங்கை மிகுந்த அதிர்ச்சியும் கவலையும்...

பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவன் பலி

பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (12)...

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

சிறைச்சாலை திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக, சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதி ஒருவரை...