follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபுற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை வழங்கியது ஈரான்

புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை வழங்கியது ஈரான்

Published on

ஈரான் குடியரசில் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியான புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் நேற்று(04) சுகாதார அமைச்சில் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

ஈரானிய தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே (Hashem Ashjazadeh) இந்த மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த நன்கொடையின் கீழ், இந்த நாட்டிற்கு தேவையான பல மருந்துகள் உள்ளன. புற்றுநோய், இதய நோய், தோல் நோய், வைரஸ் தொற்று, உயர் ரத்த அழுத்தம், பார்கின்சன் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இவ்வாறான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக் கொள்வது பெரும் நிம்மதி அளிப்பதாகவும், அதற்காக இலங்கை பிரஜைகள் சார்பாக ஈரான் மக்கள் உட்பட ஈரான் குடியரசிற்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...