follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமக்கள் விரோத அரசாங்கத்துடன் ஒருபோதும் இணைந்து கொள்ளப் போவதில்லை

மக்கள் விரோத அரசாங்கத்துடன் ஒருபோதும் இணைந்து கொள்ளப் போவதில்லை

Published on

பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் சுதந்திரம் கூட நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மீறும் நிலையை எட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற அமைதிவழி ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டாளர் வசந்த முதலிகே அவர்களை பார்வையிடுவதற்காக இன்று(19) ராகம வைத்தியசாலைக்கு சென்ற போதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்நாட்டு மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்த சுதந்திரம் இருக்க வேண்டும் எனவும், அரசாங்கம் இதனை இல்லாதொழிப்பதை எதிர்க்கட்சி என்ற ரீதியில் வன்மையாக நிராகரிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலை இடைநிறுத்தி சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு மக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட இந்த அரசாங்கம் மீறிவருவதாகவும், இவ்வாறான போக்குடைய அரசாங்கத்துடன் தனக்கோ அல்லது மக்களுடன் தொடர்புள்ள தமது கட்சியில் உள்ள எவருக்குமோ எந்த தொடர்புமில்லை எனவும், இந்த மக்கள் விரோத அரசாங்கத்துடன் ஒருபோதும் இணைந்து கொள்ளப் போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...