follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1டெங்கு ஒழிப்புக்காக ஒவ்வொரு வெள்ளியும் 2 மணிநேர ஒதுக்கீடு

டெங்கு ஒழிப்புக்காக ஒவ்வொரு வெள்ளியும் 2 மணிநேர ஒதுக்கீடு

Published on

இன்று (26) முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அரச நிறுவனங்களும் டெங்கு ஒழிப்புக்காக 2 மணித்தியாலங்களை ஒதுக்க வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.

அதற்கான சுற்றறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, டெங்கு பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மாகாண ஆளுநர்களின் ஒருங்கிணைப்புடன் விசேட வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளீன் ஆரியரத்ன தெரிவித்தார்.

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 37209 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...