follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுகிழக்கில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

கிழக்கில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

Published on

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தலைமைச்செயலாளர் மற்றும் அமைச்சுகளின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தித்து, கிழக்கு மாகாணத்துக்குரிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுதருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது உறுதியளித்தார்.

இதன் ஓர் அங்கமாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள நீர்விநியோக பிரச்சினையை சீர்செய்ய, உள்ளுராட்சி சபைகளுக்கு புதிய நீர் குழாய்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அத்துடன், தான் அமைச்சு பதவியை ஏற்ற பின்னர் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது தெளிவுபடுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கொட மற்றும் பாணந்துறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் – விசாரணைகள் தொடர்கின்றன.

கொஸ்கொட மற்றும் பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர்...

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...