follow the truth

follow the truth

June, 25, 2025
Homeஉள்நாடுசீன பிரதி வெளிவிவகார அமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

Published on

சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணை தலைமை வகிப்பதற்கு இலங்கைக்கு வருகை தந்துள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழுவினர் இன்று (30) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.

இருதரப்பு ரீதியாக நிலவி வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும், உற்பத்தித் தொழில் புரட்சியை அடுத்த கட்டத்திற்கு முன்கொண்டு செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது கோரிக்கை விடுத்தார்.

சீனப் பொருளாதாரப் புரட்சி தொடர்பான முன்னோடிகளை கருத்திற் கொள்வது போல பிராந்திய அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

பிராந்திய அமைதி மற்றும் நல்லிணக்கம் போலவே ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் சர்வதேச உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் சீன பிரதி வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பகிடிவதை செய்த சம்பவத்தின் அடிப்படையில்...

இலங்கைக்கு பயணம் செய்யும் ஆஸி நாட்டவர்களுக்கு பயண எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியா நாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதன்படி, இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்கள் அதிக...

சுட்டுக் கொல்லப்பட்ட 2 இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட...