follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP1எதிர்காலத்தில் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியாது

எதிர்காலத்தில் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியாது

Published on

டீசல் விலை குறைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியாது எனவும், எனவே உதிரி பாகங்கள் மற்றும் டயர்களின் விலையை குறைக்கும் வேலைத்திட்டம் தேவை எனவும் அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேருந்துகளில் பயன்படுத்தப்படும் பேட்டரி ஒன்றின் விலை 35,000 ரூபாவிலிருந்து 80,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், டயரின் விலை 1 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

ஒரு டயர் நிரப்புவதற்கு 25,000 ரூபா தேவைப்படுவதாகவும், இதற்கு மேலதிகமாக மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாகவும், சில உதிரி பாகங்களின் விலை 500% அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் டீசல் விலை குறைப்பு தொடர்பில் பேரூந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டதாகவும், இதன் மூலம் பேரூந்து வருமானம் குறைந்ததாகவும், ஆனால் பேரூந்துகளின் பராமரிப்புக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேரூந்து கட்டணத்தை திருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பேரூந்து உதிரி பாகங்கள், மசகு எண்ணெய் மற்றும் விலையை குறைக்கும் வேலைத்திட்டம் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து தென்னக்கோன் சார்பிலான சாட்சியாளர்கள் சாட்சி பதிவுகள் நிறைவு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம்...

அடுத்த மாதம் முதல் பஸ் கட்டணம் குறைப்பு

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5% குறைக்கப்படும் எனவும் குறைந்தபட்ச கட்டணம் திருத்தப்படாது எனவும்...

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதி பிரகடனம்

பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும்...