ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 9 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மக்களுக்கு அறிவிக்கவுள்ளார். மேலும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையை ஜனாதிபதி அறிவிக்க உள்ளார்.
ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை விடுத்து நாட்டின் இலக்குகளை அடைவதற்கான செயற்பாட்டுப் பிரேரணையையும் முன்வைப்பார்.