follow the truth

follow the truth

June, 26, 2025
HomeTOP1ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையம் பற்றிய புதிய தீர்மானம்

ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையம் பற்றிய புதிய தீர்மானம்

Published on

ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவை நிறுவுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு தரநிலையுடன் உரிமம் வழங்குவதை ஒழுங்குபடுத்தும் முறைமையை தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை மாத்திரமே அமைச்சரவை உபகுழு தயாரித்துள்ளதாக அமைச்சர் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் வெகுஜன ஊடக அமைச்சினால் விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலிய வழக்கில் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள்...

கொழும்பு பங்குச் சந்தைகள் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (26) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு...

எங்கள் தேசம் முதுகெலும்புள்ள தேசம் ஒரு நாளும் சரணடைய மாட்டோம் – காமெய்னி சூளுரை

ஈரான் சுப்ரீம் லீடர் ஆயத்துல்லாஹ் அலி காமெய்னி இன்று ஈரான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். குறித்த உரையில் அமெரிக்க...