follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஐந்தாம் ஆண்டு மாணவன் தற்கொலை

ஐந்தாம் ஆண்டு மாணவன் தற்கொலை

Published on

ஆறு வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டின் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் பண்டார இதனைத் தெரிவித்தார்.

பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவர் கழிவறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திக்ஓயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பக்வந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...