follow the truth

follow the truth

May, 12, 2025
Homeவணிகம்'அபே கெதர அவுருது 2023'” டிஜிட்டல் நிகழ்ச்சியை 4வது வருடமும் நடத்திய HNB FINANCE

‘அபே கெதர அவுருது 2023’” டிஜிட்டல் நிகழ்ச்சியை 4வது வருடமும் நடத்திய HNB FINANCE

Published on

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்திற்கான அறிவு மற்றும் வேடிக்கையான பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகள் மற்றும் பிற புத்தாண்டு அம்சங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் புத்தாண்டு ஊக்குவிப்பு திட்டத்தை தொடர்ச்சியாக நான்காவது முறையாக நடத்தியது.

HNB FINANCE இன் “அபே கெதர அவுருது 2023” டிஜிட்டல் ஊக்குவிப்புத் திட்டத்தில் ஏராளமானோர் இணைந்தனர் மற்றும் HNB FINANCE நிறுவனம் இங்கு ஆரம்பிக்கப்பட்ட புத்தாண்டு டிஜிட்டல் விளையாட்டுகளில் இணைந்து வெற்றிபெற்ற அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த மூன்று வருடங்களைப் போலவே, இந்த ஆண்டும் புத்தாண்டு தொடர்பான பல டிஜிட்டல் விளையாட்டுக்கள் HNB FINANCE “அபே கெதர அவுருது 2023” டிஜிட்டல் ஆண்டு மேம்பாட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இது மரத்தன், தலையனை போட்டி, மிட்டாய் பிடிப்பது, சறுக்கு மரம் ஏறுதல், Tuk Tuk Run மற்றும் பல போட்டிகளைக் கொண்டிருந்தது. மேலும், இந்த டிஜிட்டல் ஆண்டு விளையாட்டு பங்குபற்றியவர்களுக்கு பரிசளிப்பதற்காக பதிவு செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கியது மற்றும் Download செய்யக்கூடிய ஆண்டு பஞ்சாங்கங்கள் மற்றும் ஆண்டு நற்செய்திகளும் வழங்கப்பட்டன.

HNB FINANCE இன் ‘அபே கெதர அவுருது 2023’ டிஜிட்டல் புத்தாண்டு ஊக்குவிப்புத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த HNB FINANCE இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி உதார குணசிங்க, “புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தில் அதிக கவனம் செலுத்தும் ஒரு நிதி நிறுவனமாக, நாங்கள் இந்த திட்டத்தை கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த போது 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம்.

அதன் பிறகு, பயனர்களின் வலுவான ஆர்வத்தின் காரணமாக, தொடர்ச்சியாக நான்காவது முறையாக, முந்தைய ஆண்டை விட பல புதிய டிஜிட்டல் அனுபவங்களுடன் எங்களது அபே கெதர அவுருது 2023 டிஜிட்டல் புத்தாட்டு வேலைத் திட்டத்தை வழங்கினோம்.

HNB FINANCE இன் டிஜிட்டல் புத்தாண்டு 2023 ஊக்குவிப்புத் திட்டம் இந்த பண்டிகை காலத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், ஏனெனில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு இலங்கையில் இனம் மற்றும் மதம் பாராமல் அனைவருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.” என தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...