அரபிக்கடலில் உருவாகியுள்ள பிப்பர்ஜாய் புயல், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகள் நாளை கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், குஜராத்தில் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புயல் காற்றின் வேகம் மணிக்கு 135 முதல் 145 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு மின்தடை மற்றும் வெள்ளம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.