follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP2வாகன இறக்குமதி - பல காரணிகளை பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும்

வாகன இறக்குமதி – பல காரணிகளை பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும்

Published on

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து பல காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் சமீபத்திய கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் பல காரணிகளை கருத்திற்கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சுமார் 4,000 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 3,000 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...

தாய்லாந்தின் பிரதமர் பதவி இடைநீக்கம்

தாய்லாந்தின் பிரதமராக இருந்த பெட்டோங்தார்ன் சினவத்ரா தனது பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவலளிக்கின்றன. இந்த முடிவுக்கு...