follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1துப்பாக்கிச் சூடு அதிகரிப்பால் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது

துப்பாக்கிச் சூடு அதிகரிப்பால் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது

Published on

துப்பாக்கிப் பாவனையினால் அதிகரித்து வரும் கொலைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றவியல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் வழங்கிய நேர்காணலில் வெளிநாட்டவர்கள் இந்நாட்டில் முதலீடு செய்யும் போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாகக் தெரிவித்திருந்தார்.

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைகளின் எண்ணிக்கையை விடவும் இவ்வருடம் இதுவரை அதிக எண்ணிக்கையிலான மனிதக் கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் சமூகத்தின் பாதுகாப்பு அழிந்து வருவதாக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

சமுதாயத்தில் பெருமளவில் துப்பாக்கி புழக்கம் அதிகரித்துள்ளதால், நகர்ப்புற சமுதாயத்தில் பயன்படுத்தப்படும் தானியங்கி ஆயுதங்களை களைய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் இரவு நேரங்களில் பல பகுதிகளில் 04 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...