follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஅதிக விலைக்கு முட்டை விற்பனை - 5 லட்சம் ரூபாய் அபராதம்

அதிக விலைக்கு முட்டை விற்பனை – 5 லட்சம் ரூபாய் அபராதம்

Published on

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த நிறுவனம் மற்றும் இரண்டு கடைகளுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

அதன்படி, குறித்த நிறுவனத்துக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும், மற்ற இரண்டு கடைகளுக்கு 1 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நுகர்வோர் அதிகாரசபையின் மாத்தறை மாவட்ட அலுவலகஅதிகாரிகளினால் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் குறித்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...