follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலையில் மாற்றம்

Published on

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு,அதன் புதிய விலை 328 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அத்துடன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 365 ரூபாய் ஆகும்.

சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் அதிகரித்து ரூபாய் 346 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைந்து 308 ரூபாவாக காணப்படுகிறது.

அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைந்து 236 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு இணையான எரிபொருள் விலைகளை இலங்கை ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றியமைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்

LATEST NEWS

MORE ARTICLES

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...