follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கையில் மாற்றம்

போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கையில் மாற்றம்

Published on

போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்ததாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கை தயாரிப்பது தொடர்பில் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஒன்றிணைந்த போக்குவரத்து தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“போக்குவரத்து தொடர்பில் தேசிய கொள்கை இல்லாதது இங்குள்ள பிரதான பிரச்சினையாகும். இது தொடர்பில் தலைமை தொழிற்சங்கத்தினால் அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டது.

25 வருட கால தேசிய கொள்கையின் ஊடாக இந்த நாட்டில் நாளைய போக்குவரத்து திட்டத்தை உருவாக்க முடியாது. எனவே, நாட்டுக்கு ஏற்ற தரமான பயணிகள் போக்குவரத்து சேவையை பேணுவதற்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன போக்குவரத்து திட்டத்தை உருவாக்க புதிய தேசிய கொள்கையை உருவாக்குவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

நவம்பரில் தேசிய கொள்கையை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதாக அவர் எங்களிடம் ஒப்புக்கொண்டார்…” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...

மத்தளவுக்கு புத்துயிர் – பிமலிடமிருந்து மறுசீரமைப்பு திட்டம்

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல்...