follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1பொலிஸ்மா அதிபர் நியமனம் குறித்து அரசு விளக்கம்

பொலிஸ்மா அதிபர் நியமனம் குறித்து அரசு விளக்கம்

Published on

பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் போது மதம் அல்லது வேறு எந்த அமைப்பினதும் அழுத்தங்களுக்கு அடிபணிய அரசாங்கம் தயாராக இல்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் உரிய நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஸ்திரமான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் கருத்து தெரிவிக்கையில்;

“ஒரு அரசாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டு அறிக்கை பெறப்படுகிறது. இந்த மதிப்பீட்டில் பயங்கரவாதம், தீவிரவாதம், சட்டவிரோத நடவடிக்கைகள், புவிசார் அரசியல் மற்றும் குற்றத்தடுப்பு ஆகியவை அடங்கும். இந்த மதிப்பீட்டின்படி, தேசிய பாதுகாப்பு அடிப்படையில் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...