follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபஸ் விபத்தை தடுத்து பல உயிர்களை காப்பாற்றிய இராணுவ வீரருக்கு பிரதமர் பாராட்டு

பஸ் விபத்தை தடுத்து பல உயிர்களை காப்பாற்றிய இராணுவ வீரருக்கு பிரதமர் பாராட்டு

Published on

கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த பேருந்து பள்ளத்தில் விழுந்து இடம்பெறவிருந்த பாரிய விபத்தைத் தடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இலங்கை இராணுவத்தின் கோப்ரல் பி.ஆர்.கே.எல் கருணாரத்ன பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று (10) சந்தித்ததுடன், கோப்ரல் கருணாரத்னவின் வீரச் செயலை பிரதமர் பாராட்டினார்.

கடந்த மே மாதம் 26 ஆம் திகதி இந்த பேருந்து உடுதும்பர பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் சாரதி இருக்கையில் இருந்து சாரதி தூக்கி வீசப்பட்டு சுமார் ஐம்பது மீற்றர் தூரம் சாரதியின்றி பேருந்து பயணித்துள்ளது.

அப்போது பேருந்தில் பயணித்த இராணுவ கோப்ரல் உடனடியாக செயற்பட்டு சாரதி இன்றி பெரும் பள்ளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்த பேருந்தை பெரும் பிரயத்தனப்பட்டு தடுத்து நிறுத்தி பாரிய விபத்தை தடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...