follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மருத்துவ பீடங்களில் விரிவுரையாளர்களுக்கு தட்டுப்பாடு

மருத்துவ பீடங்களில் விரிவுரையாளர்களுக்கு தட்டுப்பாடு

Published on

மொரட்டுவை, சப்ரகமுவ மற்றும் வடமேல் ஆகிய மருத்துவ பீடங்களுக்கான இறுதியாண்டு பேராசிரியர் பிரிவுகள் இதுவரை நிறுவப்படவில்லை என மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் அனைத்து மருத்துவ பீடங்களிலும் கடுமையான விரிவுரையாளர்கள் தட்டுப்பாடு நிலவுவதாக அதன் இணைப்பாளர் நவின் தாரக தெரிவித்திருந்தார்.

“.. அனைத்து மருத்துவ பீடங்களிலும் கடுமையான விரிவுரையாளர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு இது வரை தீர்வுகள் வழங்கப்படவும் இல்லை.

புதிதாக நிறுவப்பட்ட மூன்று மருத்துவ பீடங்களை எடுத்துக்கொண்டால் மொரட்டுவை, சப்ரகமுவ மற்றும் வடமேல், மருத்துவ பீடங்களில் இன்னும் இறுதியாண்டு பேராசிரியர் பிரிவுகள் நிறுவப்படவில்லை.

இதனால் அந்த இறுதியாண்டு மாணவர்கள் இந்த வருடம் அந்த இறுதியாண்டை ஆரம்பிக்கின்றனர். இன்னும் அந்த பேராசிரியர் பிரிவுகளை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை. குறைந்த பட்சம் மொரட்டுவை மருத்துவ பீடத்திற்கான கட்டிடம் கூட இல்லை.

மருத்துவ கல்வி இப்படி பல பிரச்சினைகளுடன் நகர்கிறது. புதிதாக மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவ அரசாங்கம் முற்சிக்கிறது. தற்போது அரசு மருத்துவமனைகளில் அது தொடர்பான மருத்துவப் பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது..” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...